Friday, August 24, 2012

"வைகல் தோறும் தெய்வம் தொழு" ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்"

"வைகல் தோறும் தெய்வம் தொழு" ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்":
"ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்" என்று காலை விடியல் வேளை தொழ அழைக்கும் பாங்குக்கு இரண்டு முறை சொலப்படுகின்றது. இப்பொழுதெல்லாம் பல ஊர்களில் தொழ ஆறம்பிக்கும் சுமார் பத்து நிமிடத்திற்கு   முன் ‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது தொழ வாருங்கள்" என்று தமிழில் சொல்லி அழைக்கவும் செய்கின்றனர்
‘‘தூக்கத்தை விட தொழுகை மேலானது எழுந்து வாருங்கள்" ("ஃபஜர் பாங்கில் அஸ்ஸலாத்து கைரும் மினன் நவ்ம்") என்று விடியல் வேளையில் தொழுகைக்கு அழைப்பவர் இரண்டு முறை குரல் கொடுக்கின்றார்.

 (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். அனஸ்(ரலி) அறிவித்தார் (- ஹதீஸ் 603.புகாரி )

12ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த ஔவையார் "வைகல் தோறும் தெய்வம் தொழு" என்பதும் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று"  என்பதும் இஸ்லாமிய சமுதாயத்தில் பள்ளிவாசலில் சென்று தொழுவதற்கு கொடுக்கும் முக்கியதிற்கும் மற்றும் காலைத் தொழுகையான  ஃபஜர்  தொழுகை மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது என்பதற்கும் பொருந்துவதனைக் காண மகிழ்வாக இருக்கின்றது.

காலையில் எப்படியாவது வைகறை [பஜர் ] தொழுகைக்கு எழுந்தாக வேண்டும்.தொழுகையை அதன் குறிப்பிட்ட நேரத்தில் அதற்குரிய சுன்னத் தொழுகையோடு தொழுது வந்தால் உடலின் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்கலாம்.

ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)

ஒரு மனிதர் தனித்துத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும். என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.அறி:இப்னு உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்:புகாரி,முஸ்லிம்,திர்மிதி
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஓதுவதற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 96:௧

இதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.(2:151)

(யாவற்றையும்) படைத்த உம்முடைய தொழுகை திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. ( குர்ஆன் 96: 1)

 ஔவையாரும் இதனை "ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்" -ஔவையார்
 மூன்று ஔவையார் வாழ்ந்ததாகவும் அவர்கள் பெண் பாவலர் என்றும் சொல்கின்றார்கள்



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails