Sunday, May 6, 2012

உன்னை மற இறைவனை நினை


உன்
பள்ளிவாசல் தோப்புகளில்
சிலர்
தென்னையைப் போல்
தலை உயர்த்திக் காட்டித்
தங்களைத்
தென்படுத்திக் கொள்வதிலேயே
குறியாக இருக்கிறார்கள்
நானோ
ஒரு
வாழைக் கன்று போல
என்னை
மட்டுப்படுத்தி
மறைத்துக் கொண்டே
உன்னிலே
கட்டுண்டு கிடப்பதிலே
களிப்புண்டுக் கிடக்கின்றேன்

உன் பள்ளிவாசலில் சிலர்
தங்களைக் காட்டிக்கொள்வதிலேயே
குறியாய் இருக்கும்போது
நான் என்னை மறைத்துக்கொண்டு
உன்னிடம் இணைந்திருப்பதையே
நேசிக்கிறேன்

பள்ளிவாசலில்
உன்னைத் தாழ்த்து
இறைவனோடு
இணைவதையே போற்று

உன்னை மற
இறைவனை நினை


Source http://anbudanbuhari.blogspot.in Indeed all the praises are due to Allah, we praise him and we seek his assistance and forgiveness, and we seek refuge in Allah.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails