Monday, February 13, 2012

சந்தோஷத்தை கொண்டு வரும் சாதனங்கள்

أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم
1. நற்ச்செயல்கள்:
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். திருக்குர்ஆன்: 16:97
2. இறையச்சமுள்ள துணைவி:
“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! திருக்குர்ஆன்: 25:74
3. விசாலமான வீடு:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வே! எனது வீட்டை எனக்கு விசாலமாக்குவாயாக.”
4. நேர்மையான வழியில் பெறப்படும் மற்றும் சம்பாதிக்கபபடும் ஆகாரம்:
நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தய்யிப் (நன்மை மிகுந்தவன் மற்றும் தூய்மையானவன்). அவன் நல்லதையும் தூய்மையானதையும் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை.”
5. நற் பண்புகள் மற்றும் மக்களுடன் நட்புடன் பழகும் மனப்பான்மை:
இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்… திருக்குர்ஆன்: 19:31
கடனற்றவராக இருப்பதும் ஊதாரித்தனமாக செலவழிக்காமல் இருப்பதும்: இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள்… திருக்குர்ஆன்: 25:67
(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்… திருக்குர்ஆன்: 17:29

Source : http://theheartopener.wordpress.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails