Tuesday, November 22, 2011

மனிதமனப் படகின் ஆறுதல் கரைகள்


தாளாத துயர் வரும்போது
தன்னையறியாமல்
மனிதன்
மரணத்தைக்
காதலிக்கவே செய்கிறான்

வாழ்நாளில்
ஒரே ஒரு முறையாவது
மரணத்தைக் காதலிக்காத
மனிதன் இருக்கிறானா

உயிர் கிழியும்
கொடுந் துன்பத்தில்
மனிதன் நினைப்பது
இரண்டினை
ஒன்று கடவுள்
அடுத்தது மரணம்

கடவுளும் மணரமுமே
மனிதமனப் படகின்
ஆறுதல் கரைகள்
Source : http://anbudanbuhari.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails