Monday, October 17, 2011

லஞ்சம் கொடுத்தல், வாங்குதல்.

   அரசு நடத்திய உள்ளாச்சி தேர்தல் முடிந்தது .கிராமங்களில் பண பரிமாற்றங்கள் அதிகமாக நடைபெற்றன . இனி செலவு  செய்த பணத்தினை எடுக்கவும் எதிர்பார்த்தபடி  பொருள் ஈட்டவும் செயல்பட முனைவார்கள். வோட்டு போட்டவர் அடுத்த தேர்தல் வருமா! நாம் போட்ட வாக்கினால் ஒரு பயனும் இல்லையே! என்ற வேதனையோடு காலத்தினை ஓட்டுவார். "எல்லாம் விதி" என்ற ஒரே வார்த்தை அனைவருக்கும் கைவசமுள்ள(Ready made) வார்த்தையாக இருக்கும். கிடைத்த வாய்ப்பை முறையாக பயன்படுத்தாமல் விதி என்ற வார்தையில் அடைக்களம் ஆவதுதான் நம் விதியோ?


  பணம் போட்டவர் பணம் எடுத்து விடுவார் . அவர்கள் ஒட்டிய விளம்பர தேர்தல் தாள் (நோட்டீஸ்) மட்டும் நம் வீட்டின் வாயிலில் வரவேற்பாக இருந்துக் கொண்ட இருக்கும். ஓட்டியவர் அழிக்க மாட்டார் .பணமிருந்தால் நாம்தான் செலவு செய்ய வேண்டும்.இது நம் விதி


"லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!"
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
ஆதாரம் : இப்னுமாஜா

சுய நலமும்.. விளம்பர மோகமும்.. பாகம் - 1 from adeen-frtj on Vimeo.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails