Friday, September 16, 2011

பைக் விபத்து - அசாருதீன் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்!



கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இரு சக்கர  வாகன விபத்தில் சிக்கி ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் மகன் அயாசுத்தீன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

பைக்கை அதிக வேகத்தில் ஓட்டிச் சென்றதால் அயாசுதீனும் அசாருதீனின் சகோதரி மகன் அஜ்மல் உர் ரஹ்மானும் விபத்தில் சிக்கினர். விபத்து ஏற்பட்டு மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற சில மணி நேரங்களிலேயே அசாருதீனின் சகோதரி மகன் அஜ்மல் உர் ரஹ்மான் உயிரிழந்தார். ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்த அயாசுதீனும் இன்று காலை உயிரிழந்தார்.

தலை, வயிறு மற்றும் மார்பு பகிதியில் பலத்த அடி பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப் பட்டு வந்த ayaasutheenukku ரத்தக் கசிவு நிற்காததால் நேற்று முன் தினம் இடது சிறுநீரகம் அகற்றப்  பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.
Source : http://www.inneram.com/
-------------------------------------------------------------------

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails