Thursday, June 30, 2011

அல் குர்ஆன் ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع الاستماع للتلاوة






அல் குர்ஆன்  ஓதுதல் (Recitations) & மொழிபெயர்ப்புகள் (ஆடியோ) பொறுத்தவரையில் القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع الاستماع للتلاوة
For  AL Quran Recitations & Translations (Audio)القرآن الكريم و ترجمة لمعانيه لعدة لغات مع
الاستماع للتلاوة

 தயவு செய்து இங்கு கிளிக் செய்யுங்கள் please click here : Quran Explorer – [Sura : 1, Verse : 1 - 7]

Wednesday, June 29, 2011

அனைத்து நேரமும் அல்லாஹ்வை (இறைவனை) நினைப்போம்!


எதையும் செய்ய ஆரம்பிக்கும் பொழுது
பிஸ்மில்லாஹ்
அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (ஆரம்பம் செய்கின்றேன் )

எதையும் செய்ய  நினைக்கும்போது
இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்  நாடினால் 

தவறை எண்ணி வருந்தும் போது
அஸ்தஹ்பிருள்லாஹ்
 அல்லாஹ் பிழை  பொறுப்பானாக

பிரச்சனைகள் ஏற்படும் போது
தவக்கல்து   அல்லாஹ்
அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டேன்

நற்செய்தி கேள்விப்படும் போது
மாஷா அல்லாஹ்
அல்லாஹ்வின் நாட்டப்படி (நடந்துள்ளது )

எதையும் ஆச்சரியத்துடன் புகழும் போது
சுப்ஹானல்லாஹ்
அல்லாஹ் பரிசுத்தமானவன்

யாரையும் வழி அனுப்பும் போது
feeபி அமானில்லாஹ்  
அல்லாஹ்வின் பாதுகாப்பில் {சென்று வருக)

தர்மம் செய்யும்  போது  
feeபீஸபீலில்லாஹ்
அல்லாஹ் பாதையில் (கொடுக்கிறேன்)

தும்மல் வரும் போது
அல்ஹம்துலில்லாஹ்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே (உரியது )

பிறர் தும்மும்போது 
யர்ஹமுகல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக

யாருக்கும் நன்றி கூறும்போது
ஜஸாகல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு  நற்கூலி வழங்குவானாக 

பாதகமான சூழ்நிலை ஏற்படும் போது
நஊதுபில்லாஹ்
அல்லாஹ் நம் (அனைவரையும்) காப்பாற்றுவானாக

நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும்போது
fபதபாரகால்லாஹ்
அல்லாஹ் மிக உயர்ந்தவன்

சத்தியம் செய்யும்  போது
வல்லாஹி பில்லாஹ்
அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை (மீறமாட்டேன் )
(அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதனை தவிர்ப்பது நல்லது )

Tuesday, June 28, 2011

சவுதி இளவரசர் நைட் கிளப்பில் ஒரு மில்லியன் டாலர் செலவு செய்தல் !

நம்ப முடியவில்லை ! பார்த்த வீடியோ பகிர்ந்து கொள்ள ஆசை ! உண்மையா! பொய்யா! எனக்குத் தெரியாது.

சவுதி நாட்டவர் ஒருவர் கடந்த வாரம் துபாய் நைட் கிளப்பில் 1 மில்லியன் ரியால்ஸ் செலவிட்டது ....

Monday, June 27, 2011

ஒன் இன்கிரிடண்ட் இட்லி!

ஒரே ஒரு பொருளை மட்டும் வைத்து இட்லி, தோசை, மற்றும் அடை செய்வதை இந்தச் சமையல் குறிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள் : பாசிப்பருப்பு     (ஆம், பாசிப்பருப்பு மட்டும் போதும்)
செய்முறை:
மிக்ஸியில் பாசிப்பருப்பை இட்லிக்கு அரைப்பதுபோல் அரைத்துக் கொள்ளவும். அதை உப்பு போட்டு கலந்து ஆறு மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.
குறிப்பு :
1. தேவையென்றால் தோசையாகவும் சுட்டுக் கொள்ளலாம்.    

2. வேண்டுமெனில் கடுகு உளுந்து, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்துருவல் தாளித்துபோட்டு அடையாகவும் சுட்டுக்கொள்ளலாம்.     

3. இதற்குத் தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
Source : http://www.inneram.com/2011062717544/one-incredent-idly

மிஃராஜ் தரும் படிப்பினைகள்...! (பகுதி 1)

இஸ்லாமிய வரலாற்றில் மறக்கப்படாத, மறக்கடிக்க முடியாத திரும்பத் திரும்ப நினைவுகூரப்படும் பல்வேறு தருணங்களும் நிகழ்ச்சிகளும் உண்டு. அவற்றில் இறைவனின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அவ்வாறான இறை அத்தாட்சிகளில், இன்று இஸ்லாமிய உலகம் நினைவு கூரவேண்டிய ஒரு நிகழ்வுதான் இஸ்ரா எனப்படும் மிஃராஜ் நிகழ்ச்சி.
உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் இறைவன் புறத்திலிருந்து தமக்கு வழங்கப்பட்ட அத்தாட்சிகளை தத்தம் சமுதாயத்திற்கு காண்பித்து அவர்களை இறைநம்பிக்கையில் உறுதி படுத்தியது போன்று, அகிலத்தின் அருட்கொடையாகிய பெருமானார் நபி(ஸல்) அவர்களுக்கும் தனது அத்தாட்சியை காண்பிப்பதற்காக இறைவன் ஜிப்ரீல்(அலை) அவர்கள் துணையுடன் நபி(ஸல்) அவர்களை விண்ணுலகில் கொண்டு சென்று சுற்றிக் காண்பித்த நிகழ்வுதான் மிஃராஜ் எனப்படுகின்றது.

Sunday, June 26, 2011

கணினி மென்பொருள் டிப்ஸ்: வேகமாக இயக்கவும் உங்கள் கணினி பெறுவது எப்படி!


கணினி மென்பொருள் டிப்ஸ்: வேகமாக இயக்கவும் உங்கள் கணினி பெறுவது எப்படி!
Computer Software Tips : How to Get Your Computer to Run Faster

புகைப் பழக்கம்

புகைப் பழக்கம்: "நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் இருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு 'சமூக விரோதி' புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.
þறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?

Saturday, June 25, 2011

அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி !





அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
அல்லாஹ்வே எண்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கியதால் ஏறி
பூவனம்
பொற்காலம்
ஆனதேனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லா
என்  காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் காஷ்மீர்
யா அல்லா
என் காஷ்மீர்
அழகாய் மாறாத
யா அல்லா
என் காஷ்மீர்
அமைதி காணாத

ஒ .. அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே
கல்லறை தோட்டம் ஆனத
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதே
வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று
மரணம் கண்டு இன்று

ஒ எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ
விதவைகள் பார்த்து அழைத்தான
ஒ எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தான
எண்கள் மண்ணில் குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எண்களின் கண்ணில் கத்தி வைத்து
குத்தும் காலம்
ஒ அல்லா
எங்கு போகும்
காஷ்மீர் புறாக்கள்
ஒ அல்லா
என்று தோன்றும்
காஷ்மீர் விழாக்கள்

எங்கள் அன்றைய காஷ்மீர்
எங்கள் காஷ்மீர்
ஒ ஹோ ....
எங்கள் சொர்க்க பூமியை இன்று
சாக்கடை யார் செய்தார்
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்

கலவரம்
முடியுமா
நிலவரம்
மாறுமா
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்
பூக்கள் பூத்திட வேண்டும்
புதை குழி அழிந்திட வேண்டும்

சாலையில் சென்று வர இன்று
ஒ .. சாவை வென்று வர வேண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவை வென்று வர வேண்டும்
இந்த நிலையை தந்தாரோ
புரியவில்லை
கண்களை
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே

என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்
என் காஷ்மீர்

Friday, June 24, 2011

குழந்தைகள் இஸ்லாமிய பாடல்கள்

''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ் நூல்: முஸ்லிம் 2911

Thursday, June 23, 2011

ஜும்ஆ மட்டும் கூடுமா?

ஐயம்:
அஸ்ஸலாமு அலைக்கும்.
எங்கள் ஊரில் ஐந்து பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடைபெறுகிறது. அவை போக, ஒரு பள்ளிக்கூடத்தில் வெள்ளிக்கிழமை, குத்பா+ஜும்ஆத் தொழுகை மட்டும் நடத்துகின்றனர்.

ஐவேளைத் தொழுகை நடத்தப்படாத இடத்தில் இவ்வாறு வெள்ளிக்கிழமை மட்டும் ஜும்ஆத் தொழுவதற்கு இஸ்லாமிய முன்னுதாரணம் உண்டா? ஐவேளை தொழுகை நடத்தப்படாத இடத்தில் ஜும்ஆ நடத்துவது கூடுமா?

- நிஜாமுத்தீன், அதிராம்பட்டினம்.


தெளிவு:
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்,
ஜும்ஆத் தொழுகை மட்டும் தொழுவதற்கென ஜமாஅத்தினர் ஓரிடத்தைத் தேர்வுசெய்து, அந்த இடத்தைக் குறிப்பிட்டு இன்ன இடத்தில் ஜும்ஆத் தொழுகை நடத்தப்படும் என்று மக்களுக்கு அறிவித்து, அங்குத் தொடர்ந்து ஜும்ஆத் தொழுகையை மட்டும் நடத்திக்கொள்ளலாம். இதற்கு மார்க்க ரீதியாகத் தடையேதும் இல்லை.

நபி (ஸல்) அவர்களுடைய வஹியின் ஆரம்ப நிலை!

ஆயிஷா (ரலி) கூறினார்: -
“நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.
பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.
(ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதும்’ என்றார். அதற்கவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
“அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன்.
அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, ‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை ‘அலக்’கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்’ என்றார்.”
மேலும், ஆயிஷா (ரலி) கூறினார்.
பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள்,
‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள்.

கேளுங்கள்

நீ எவர்களின் மீது அருள் புரிந்தாயோ அவர்கள் (சென்ற) வழி(யில் நடத்துவாயாக ... நபி (ஸல்) அவர்கள், மூமின்களின் தாயான கதீஜா (ரலி) அவர்களிடம்  கூறினார்கள் ..
 The Prophet Muhammad (pbuh) said, Religion is very easy and whoever overburdens himself in his religion will not be able to continue in that way. So you should not be extremists, but try to be near to perfection and receive the good tidings that you will be rewarded; and gain strength by worshipping in the mornings, the nights.


Other sects should be duly honoured in every way on all occasions. -Emperor Ashoka
Courtesy: Dinamani Tamil Newspaper
Source : http://www.sadaqathullah.com/listen.html

Tuesday, June 21, 2011

கூட்டுத் துஆ ஏற்படுத்திய விபரீதங்கள்


எழுதியவர்-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
ஜவேளை தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ருகள் அல்லது அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட எல்லோரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை ஓதிக் கொள்ளவேண்டும்.
இந்த சுன்னத்தான வழிமுறைக்கு மாற்றமாகவே தொழுகைக்குப்பின் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் கூறும் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு ஐந்து மாதிரியான அமைப்பில் துஆக்களை உருவாக்கிக் கொண்டு ஓதிவருகிறார்கள். தொழுகை நடாத்தக் கூடிய இமாம் அந்த துஆக்களை ஓத மற்றவர்கள் கிளிப் பிள்ளைபோல் “ஆமீன்” சொல்லி விட்டு போகிறார்கள். அது மட்டுமல்லாமல் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஐந்து மாதிரி -இந்த பள்ளி இமாம் ஓதுகிறமாதிரி- துஆ ஓத சஹாபாக்கள் ஆமீன் சொன்னாரகளா? ஏன்பதை கூட விளங்குவதில்லை.

முஸ்லிம் பெயர் தாங்கிகள்.

முற்போக்குவாதிகள் என்ற கோலத்துடன் அல்லது போலி வேடம் போட்டு மக்களை கவருதாக நினைத்து தான் சார்ந்த மார்க்கத்தினை  மறந்து வாழும் மனிதர்களை நாம் பார்க்கின்றோம். புகழ் நாடி,தேர்தலில் வெற்றியடைய  அல்லது காரியம் கைக்கூட வேண்டும் என்ற காரியத்திற்காக எதையும் செய்வார்கள்  இவர்கள்.


   புதிய செய்தி  கிரிக்கெட் விளையாட்டு வீரர்   சாகிர்  கான் கோவிலுக்கு சென்று வேண்டினாராம் . திரைப்பட நடிகை இவருக்கு காதலி. இவர் எப்படி வேண்டுமானாலும் வாழ அவருக்கு உரிமை இருப்பினும் தான் ஒரு இஸ்லாமியன் என்ற பெயர்தாங்கிகளாக முஸ்லிம்  பெயரை வைத்துக் கொண்டு இருப்பதுதான் நமக்கு வேதனை . இவர் போல் பலர் . ஆனால் மற்றவர்கள் இவர்களைப் பார்த்து வழி கெடாமல் இருக்க வேண்டும் என்பதுதான்  நம் எண்ணம். 



(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (-1:4. அல்ஃபாத்திஹா திருக்-குர்ஆன்)
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மறந்து , பெயர் மட்டும் முஸ்லிம் பெயர் வைத்திருபவர்களை பெயர் தாங்கிகள்  என்றுதான் சொல்ல முடியும் .
நாம் மற்ற மதத்தினரை குறை காணும் எண்ணம் நமக்கு இல்லை .அது அவர்கள் வழி .

109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."
( -109 - ஸூரத்துல் காஃபிரூன் திருக்-குர்ஆன்)
இதுதான் இஸ்லாமிய வழி ,
1:4. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

1:5. நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!

1:6. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.

1:7. (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல
(அல்ஃபாத்திஹா திருக்-குர்ஆன்)
உலகின் அதிவேக கம்ப்யூட்டராக இதுவரை அறியப்பட்டிருந்த சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டரைவிட அதிரை விரைவு கம்ப்யூட்டரை ஜப்பானிய நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஜப்பான் நாட்டின் கே சூப்பர் கம்ப்யூட்டர் இதுவரை முன்னிலை வகித்த சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டரின் செயல் திறனை விட மும்மடங்கு வேகமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உலகின் மிக அதி விரைவு கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

கம்ப்யூட்டர் அளவீட்டின்படி, சீனாவின் டியான்ஹி-1ஏ என்ற கம்ப்யூட்டர் 2.507 பெடாபிளாப்கள் வேக செயல்பாட்டில் முதலிடம் பிடித்திருந்த நிலையில் அதனை பின்னுக்கு தள்ளி ஜப்பானின் கே சூப்பர் கம்ப்யூட்டர் 8.2 பெடாபிளாப்கள் என்ற வேக செயல்பாட்டில் முதலிடத்தை பிடித்துள்ளது. சுமார் 1.2 பில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கம்ப்யூட்டர் லேப்டாப் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களிலுள்ள ஒரு பிராசசரை போன்று ஏறத்தாழ 70 ஆயிரம் பிராசசர்களை தன்னுடைய சர்க்யூட் போர்டில் கொண்டுள்ளது.

உலக டாப் 10 சூப்பர் கம்ப்யூட்டர்கள் வரிசையில் ஐந்தினை அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டர்களும், இரண்டினை சீனாவும், இரண்டினை ஜப்பானும் மற்றும் பிரான்சு ஒரு இடத்திலும் என்ற வகையில் இடம் பிடித்துள்ளன.
Source : http://www.inneram.com/

Monday, June 20, 2011

பத்திராசிரியர்களுக்கு வேண்டிய சில நுட்பங்கள்

பத்திராசிரியர்களுக்கு வேண்டிய சில நுட்பங்கள்
இப்பொழுது சமீப காலமாக இந்நாட்டில் நாளொரு பத்திரிகையும், பொழுதொரு பேப்பருமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவற்றுள் சில தம்முடைய உரிமையை யறியாமல் தாறுமாறாக நடந்து கொள்வதை நோக்க மெத்த வருத்தமுண்ணடாகிறது. ஆதலின் இவர்களின் நன்மையையுன்னி இதன் கீழ்ச் சில முக்கியமான அம்சங்களைப் பற்றி மேற்கோள் காட்டுவோம்.
ஓரிகான் சர்வகலாசாலையைச் சேர்ந்த மிஸ்டர் சி.வி.டைமெண்ட் என்பவர் சொல்வதாவது: “பத்திரிகைத் தொழிலில் கபட வேடதாரிக்கும், உண்மையைத் திரிப்பவனுக்கும், முன்பின் உளறும் புரட்டனுக்கும், உண்மையை ஒளிப்பவனுக்கும், அயோக்கிய எண்ணமுள்ளவனுக்கும் கிஞ்சித்தும் இடமில்லை. தேச ஜனங்கள் முன்னேற வேண்டுமாயின் பத்திரிகையின் விஷயத்தில் முழுச்சுதந்திரம் கொடுக்கப்படுதல் வேண்டும்.”
இன்னும் “ஒரிகான் கோடு” என்னும் பததிரிகையில் இவ்வாறு காணப்படுகிறது: “ஒரு பத்திரிகையானது சுயநல எண்ணத்துடன் நடத்தப்படுமாயின், அது தனது கடமையில் வெற்றி பெற்றதாகக் கூறுவது முடியாது.”
இன்னும் டீன் வால்டர் வில்லியம்ஸ் என்பவர் தமது நூலில் பின்வருமாறு எழுதுகிறார்: “தெளிவான சிந்தனையும் தெளிவான சொற்பொழிவும் மெய்யான விஷயமும் பட்சபாதமற்ற தன்மையுமே பத்திரிகைத் தொழிலுக்கு அவசியம் வேண்டத்தக்கன. தாம் மெய்யென்று நம்பியதையே ஒருவர் தம் பத்திரிகையில் எழுதல் வேண்டும். பொது நன்மையின் பொருட்டு அல்லாமல் சமாசாரத்தை மறைப்பது ஒரு சமாதானமற்ற செய்கையாகும். தனது சொந்த அபிப்பிராயத்தை வேறு பத்திரிகைகளில் அன்னார் பிரசுரிப்பதில்லை யென்னும் காரணத்தினால் ஒரு சொந்தப் பத்திரிகையை நடத்த முயல்வது சிலாக்கியமான காரியமன்று.”
ஆனால், பத்திராசிரியர்கள் ஒழுகவேண்டிய முறைதான் இவ்வாறாகக் கூறப்படுகிறதே யல்லாமல், ஒழுகிவரும் முறையானது இவ்வாறு காணப்படவில்லை.
(“தாருல் இஸ்லாம்” நவம்பர், 1924.)
Source : http://www.darulislamfamily.com

Friday, June 17, 2011

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களால் அதிமுக பெருமைப்பட்டுக் கொள்ளலாம்: கருணாநிதி!

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட புதிய மின் திட்டங்களால் மின்பற்றாக்குறையே வருங்காலத்தில் இருக்காது என்றும் தங்கள் திறமையால்தான் இது சாத்தியப்பட்டது என்று அதிமுக பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்றும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார். திமுக ஆட்சியில் மின்பற்றாக்குறை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு எதுவுமே செய்யவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.

Wednesday, June 15, 2011

தேர்வு எழுத வேண்டும் !

படித்தால் தானே தேர்வு எழுத முடியும். பள்ளிக்கூடம் இருந்தாலும் பாடம் சொல்லிகொடுக்க புத்தகம் இல்லையா! கவலை வேண்டாம்.Mr.Been கலை நமக்கு தெரிந்து செயல் பட்டால் கவலை இல்லை . Mr பீன் தேர்வு எழுத என்ன செய்வார் ? பாவம் ! ஒரு கேள்விக்கும் பதில் தெரியாது அவருக்கு. இருப்பினும் அவர் சமாளிக்கும் விதமே தனி வழி தான். நம்மைப்போல் அவர் என்ன பயந்து விடுவாரா !
இதோ உங்கள் பார்வைக்கு... பாருங்கள்.

Tuesday, June 14, 2011

ஹஜ் பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள்: மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா

புதுதில்லி,ஜூன் 13: ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் இந்தியப் பயணிகளுக்கு மேலும் சில சலுகைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா திங்கள்கிழமை அறிவித்தார். எழுபது வயதுக்கு மேற்பட்ட பயணிகள் உடன் துணைக்கு ஒருவரை அழைத்துச் செல்லலாம்.
தொடர்ந்து 3 ஆண்டுகளாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்தால் சீட்டு குலுக்கல் ஏதும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுவிடுவார்கள். பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தால், போலீஸ் சரிபார்ப்புகூட இல்லாமல், 8 மாதங்களுக்குச் செல்லத்தக்கதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்.

யாத்திரைக்கு சாமான்கள் எடுத்துச் செல்லும் நடைமுறை எளிதாக்கப்படும். இந்தியாவில் 21 ஊர்களிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு விமானங்களில் நேரடியாகச் செல்லலாம். ஹஜ் பயணத்தின்போது இந்திய யாத்ரீகர்கள் தங்க 1,25,000 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்படும்.
ஜெட்டாவில் இந்தியத் தூதரகத்தில் இந்திய யாத்ரிகர்களுக்கு உதவுவதற்காக தனிப்பிரிவு செயல்படும். கடந்த ஆண்டு 1,71,671 பேர் யாத்திரை மேற்கொண்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.இத்தகவல்களை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நிருபர்களிடம் தில்லியில் திங்கள்கிழமை தெரிவித்தார்
மேலும் ஒதுக்கீட்டை விட அதிகமாக விண்ணப்பம் பெறும் டிராவல் ஏஜெண்டுகள் உரிமம் ரத்து செய்யப்படும்..! அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பதில்!
Source : http://muthupet.org/

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது பிணையில்லா கைது வாரண்ட்!

மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 வெளிநாட்டு முதலீடு சீரமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது, சென்னை எழும்பூர்  கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்ட்ரேட், பிணையில்லா கைது வாரண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

“கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி” என்ற பெயரில் சட்டத்தை மீறி வெளிநாடுகளிலிருந்து ரூபாய் 2 கோடி வசூலித்துள்ளதாக  2004 ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

நேற்று நடைபெற்ற விசாரணைக்கு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாரும் ஆஜர் ஆகாததால் நீதிமன்றம் இந்த கைது உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Source : http://www.inneram.com

Monday, June 13, 2011

தற்செயலாய் வீடு உருவாகுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின். 

ஏ, பி என்று இருவர் ஒரு காட்டிற்குள் சென்றனர். அங்கே ஒரு வீட்டை கண்டனர். ஏ உடனே ஒரு நோட்டை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.

பி: (ஆச்சர்யத்துடன்)  என்ன செய்கின்றீர்கள்?

ஏ: இவ்வளவு அழகான வீடு நிச்சயமாக இயற்கையால் பல லட்ச ஆண்டுகளாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்......அது சம்பந்தமாகத்தான் குறிப்பெடுத்து கொண்டிருக்கின்றேன்.....

பி: இது அறிவுக்கு ஒத்து வரவில்லை. இதை யாராவது கட்டியிருக்க வேண்டும்...

ஏ: எப்படி அவ்வளவு உறுதியாக கூறுகின்றீர்கள்? இயற்கையால் இந்த வீடு உருவாகியிருக்க வாய்ப்பில்லையா?

பி: ஆம். உள்ளே வாருங்கள்....(உள்ளே செல்கின்றனர்). இங்கே பாருங்கள், அறைகள் எல்லாம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருகின்றன. இயற்கை தற்செயலாக ஏதாவது ஒரு உருவத்தை உருவாக்கலாம், ஆனால் நேர்த்தியான ஒரு அமைப்பை பலவித கணக்குகளோடு உருவாக்க முடியுமா?   

ஏ: ஏன் முடியாது? 

Thursday, June 9, 2011

உலகப்புகழ் பெற்ற ஓவியர் ஹுஸைன் காலமானார்

சர்வதேசப் புகழ் பெற்ற இந்திய ஓவியர் ஹுஸைன் இன்று அதிகாலை தன்னுடைய 96 ஆவது வயதில் லண்டனில் உள்ள ரோயல் புரொம்டன் மருத்துவமனையில் காலமானார்.

சர்ச்சைக்குரிய பல ஓவியங்களை வரைந்த இவரது முழுப் பெயர் மக்பூல் ஃபிதா ஹுஸைன். இவர், 1915 செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இந்தியாவில் பிறந்தார். 1940 களின் பிற்கூற்றில் ஓர் ஓவியராகப் பிரபலமடைந்த இவரது முதலாவது ஓவியக் கண்காட்சி 1952 ஆம் ஆண்டு சூரிச்சில் இடம்பெற்றது. அதன் பின் இவர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பிரசித்தி பெற்றவரானார்.

ஃபோபஸ் சஞ்சிகையினால் 'இந்தியாவின் பிக்காஸோ' என வர்ணிக்கப்பட்ட இவர், 1955 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயர் விருதான 'பத்மஸ்ரீ' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

1967 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவரது முதல் திரைப்படமான 'த்ரூ தி ஐஸ் ஒஃப் பெயிண்டர்' (Through the Eyes of a painter) பேர்ளின் திரைப்பட விழாவில் 'கோல்டன் பெயார்' விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது. கஜகமினி (Gaja Gamini), மீனாட்சி: எ ட்டேல் ஒஃப் த்ரீ சிட்டீஸ் (Meenaxi: A Tale of Three Cities) என்பன இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். இவர், இந்தியாவின் பத்மபூஷன் (1973), பத்ம விபூஷன் (1991) ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..

1970 களில் இவர் வரைந்த சில ஓவியங்கள் குறித்த சர்ச்சைகள் 1996 ஆம் ஆண்டு சூடுபிடிக்கலாயின. இந்துக் கடவுளரின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

1992 ஆம் ஆண்டு ஓவியர் ஹுஸைனின் 92 வயதில் அவருக்கு கேரள அரசின் கௌரவ விருதான ராஜா ரவிவர்மா விருது வழங்கப்படப் போவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, இந்து அமைப்புக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தின. விருதுக்கான அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்படவிருந்த விருது ஒத்திவைக்கப்பட்டது.

Wednesday, June 8, 2011

இஸ்லாமிய பல்கலைக்கழக்கங்கள்

"சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி).
                                
(Al-Azhar University Mosque .Cairo.)
டுனிஸில் உள்ள அல் - ஜைத்துனா    ,கைரோவில் உள்ள அல் -அஷ்ஹர்  ஆகியவை உலகில் ஆயிரம் வருட பமையான புகழ் வாய்ந்த  புகழுடைய இஸ்லாமிக் யூனிவர்சிட்டிகளாகும்

பாஸித்தின் "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ பூத்த விதம் !

ப்ளாக்கர் நண்பன் Version 2.0

"ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ உங்கள் அன்போடும், ஆதரவோடும் ஒரு வருடத்தைக் கடந்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இந்த இனிய தருணத்தில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான், இணையம் மற்றும் ப்ளாக்கர்

பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.
                                                                                                                                
அந்த ப்ளாக் நான் சார்ந்த மார்க்கம் தொடர்பானது. எப்பொழுதாவது சென்று அப்டேட் செய்து விட்டு வருவேன். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜிமெயில் ஐடி கிடைத்ததும் அதிலேயே பதிவெழுத (அதாவது Copy&Paste செய்ய) ஆரம்பித்தேன்.

கணினியில் Programming Language-ஐ பொறுத்தவரையில், பதினோராம் வகுப்பில் படித்த HTML-ஐத் தவிர வேறு எதுவும் தெரியாது. பிறகு copy&paste தளமாக இருந்தாலும் அதனை அழகுப்படுத்துவதும், விளம்பரப்படுத்துவதும் எப்படி? என்று பல ஆங்கிலத் தளங்களில் கற்றுக் கொண்டு வந்தேன், இன்னும் கற்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பது ப்ளாக் தொடங்கிவிட்டேன். அவற்றில் மூன்றைத் தவிர மற்றவைகளை Delete செய்துவிட்டேன். அதற்கு காரணம் என்ன எழுதுவது என்று தெரியாததுதான்.

கடந்த வருடம் எனது உறவினர் நீடூர் அலி அவர்கள் மூலம் தமிழ்மணம், தமிழிஷ்(தற்போதைய இன்ட்லி), இன்னும் சில வலைப்பூக்கள் அறிமுகமானது. பிறகு ஒரு நாள் நாம் கற்றுக் கொண்ட ப்ளாக்கர் தொழில்நுட்பங்களையே பதிவிட்டால் என்ன? என்று தோன்றியது. உடனே ப்ளாக்கர் நண்பன் என்று பெயரிட்டு இந்த வலைப்பூவை தொடங்கி ஒரு பதிவையும் எழுதினேன்.
                                                   
பிறகு அடுத்தப் பதிவு எழுதுவதில் ஒரு சிக்கல். அது HTML Code-ஐ HTML ஆகக் காட்டுவது. HTML Code-ஐ கொடுத்தால், அது Code ஆக தெரியாமல் அதன் வெளியீடாக (Output) தெரிந்தது. அப்பொழுது அதனை சரி செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன். காரணம் Basically I Am சோம்பேறி!.

பிறகு சகோதரி கண்மணி அவர்களின் பிலாக்கர் டிப்ஸ் என்ற தளத்தைக் காண நேரிட்டது. அதில் அவர் ப்ளாக்கர் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதி வருகிறார். அந்த ப்ளாக்கை பார்த்ததும் தான் மீண்டும் பதிவெழுத வேண்டுமென்ற ஆசை வந்தது. மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, முன்சொன்ன HTML பிரச்சனையை சரிசெய்து பின் மீண்டும் பதிவெழுத தொடங்கினேன். மூன்றாவது பதிவிற்கு தான் முதல் பின்னூட்டமே கிடைத்தது. 

பிறகு கிடைத்த பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் என்னை இன்னும் அதிகமாக எழுதத் தூண்டியது. நான் கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.

Tuesday, June 7, 2011

தினந்தோறும் ஓத வேண்டிய சில துஆக்கள்

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறுவார்கள்.  ஆதாரம்: நஸயீ 5391, 5444
 
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய
 
இதன் பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
சபையை முடிக்கும் போது
ஒரு சபையை முடிக்கும் போது கீழ்க்காணும் துஆவைக் கூறினால் அந்தச் சபையில் நடந்த தவறுகள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  ஆதாரம்: திர்மிதீ 3355
 
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
 
இதன் பொருள் : இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.
 
அல்லது கீழ்க்கண்ட துஆவையும் ஓதலாம்.
 
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ)ஹம்தி(க்)க அஸ்தக்பி(எ)ரு(க்)க வ அதூபு(இ) இலை(க்)க.
 
இதன் பொருள்: இறைவா! நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன்.  ஆதாரம்: நஸயீ 1327
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது
அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க
 
இதன் பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 1165
பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க
 
இதன் பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165
சாப்பிடும் போதும், பருகும் போதும்
பி(இ)ஸ்மில்லாஹ்
 
அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 5376, 5378
 
பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்
 
சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: திர்மிதீ 1781
சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும்
அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி ஃகைர மக்பி(எ)ய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(இ)னா
 
இதன் பொருள் : தூய்மையான, பாக்கியம் நிறைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்கே. அவனது அருட்கொடை மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமன்று. அது தேவையற்றதுமல்ல.  ஆதாரம்: புகாரி 5858
 
அல்லது
 
அல்ஹம்து லில்லாஹில்லதீ கபா(எ)னா வ அர்வானா ஃகைர மக்பி(எ)ய்யின் வலா மக்பூ(எ)ர்
 
இதன் பொருள் : உணவளித்து தாகம் தீர்த்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவனது அருள் மறுக்கப்படத்தக்கதல்ல. நன்றி மறக்கப்படுவதுமல்ல.  ஆதாரம்: புகாரி 5459
 
அல்லது
 
அல்ஹம்து லில்லாஹ் என்று கூறலாம்.  ஆதாரம்: முஸ்லிம் 4915
உணவளித்தவருக்காக
அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.
 
இதன் பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.  ஆதாரம்: முஸ்லிம் 3805
தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னா வஜன்னிபி(இ)ஷ் ஷைத்தான மா ரஸக்தனா
 
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.  ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396
 
அல்லது
 
பி(இ)ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(இ)னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா
 
இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.  ஆதாரம்: புகாரி 5165, 3283
எல்லா நிலையிலும் கூற வேண்டியவை
பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும் பி(இ)ஸ்மில்லாஹ் எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 3280, 5623
கோபம் ஏற்படும் போது
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தான்
 
இதன் பொருள் : ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்: புகாரி 3282
 
அல்லது
 
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். என்று கூறலாம். ஆதாரம்: புகாரி 6115
தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்
அவூது பி(இ)ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். எனக் கூற வேண்டும்.  ஆதாரம்: புகாரி 3276

Saturday, June 4, 2011

இஸ்லாத்தின் இலக்கணம் .

எழுதியவர்:மவ்லானா அல்ஹாஜ் ஏ .முஹம்மது இஸ்மாயில்  பாஜில், பாகவி .
  நீடூர் - நெய்வாசல்.
 தற்காலத்தில் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவே இல்லை! நாங்கள் முஸ்லிம்களாக இருந்தால் என்ன? எங்களுக்கும்  மற்றவர்களுக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இல்லை என விளம்பரப்படுத்துவது போலுள்ளது ...  இன்றைய முஸ்லிம்களின் நிலை !
 அல்லாஹ்வையே நாங்கள் இரட்சகனாகப் பொருந்திக் கொண்டோம் !

LinkWithin

Related Posts with Thumbnails