Tuesday, May 31, 2011

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்த சதாம் உசேன்

 நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்ற மாணவர் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலும் பிடிதுள்ளார்.

 
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்  நெல்லை மாவட்ட செயலாளர் A. ஹைதர் அலி பரிசு வழங்குகிறார்

நெல்லை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் சார்பாக  இவரை பாராட்டிகேடயமும் பரிசும் வழங்கியது .இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, நகர தலைவர் மூஸல் காலிம் .நகர செயல்குழு உறுப்பினர் பால் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு அந்த மாணவனை வாழ்த்தினர்.
  
  இந்த மாணவனை மனிதநேய மக்கள் கட்சியின் மேலப்பாளையம் நகரத் தலைவர் ஏ.காஜா, பகுதி செயலாளர் இ.எம்.அப்துல் காதர் ஆகியோர் நேரில் சென்று பாராட்டி பரிசுகள் வழங்கினர்.பொருளாளர் எஸ்.ரப்பானி, துணைத்தலைவர் கே.கே.அப்துல் அஜீஸ், துணைச் செயலாளர் கே.பாதுஷா, அல்அய்ன் மைதீன், 32வது வார்டு செயலாளர் அசன் மைதீன், ராஹத் செய்யது அலி, ஹக்கீம் ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவன் சதாம் உசேனுக்கு பாராட்டுகள் பல குவிந்த வண்ணம் உள்ளன.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails