Tuesday, May 17, 2011

'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!

வாக்காளர்களால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு… 'க.' & 'ஜெ.' 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அதிர்ச்சி..!  


மிகவும் கஷ்டப்பட்டு, படாதபாடுபட்டு, அல்லும்பகலும் அயராது சிந்தித்து, பல போராட்டங்கள் கண்டு, இழப்புகள் பெற்று, பல வருடங்கள் கடந்து, ஒருவழியாக மேற்கு வங்கத்தில் 34 வருட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு... முற்றுப்புள்ளி வைத்தே விட்டார், மம்தா பானர்ஜி..! ஜோதிபாசு காலங்களில், மம்தா 30... 40... தொகுதிகளை பெறுவது கூட அன்று இமாலய சாதனையாக போற்றப்பட்டது. ஆனால், இன்று 225/294 வென்று அமோக வெற்றி பெற்று இருக்கிறார். இதுதான் போராடி பெற்ற வெற்றி..!



உயரே 'ஜெ.' பால்கனி போஸ்... கீழே 'ம.' மக்களுடன் ஒருத்தராய்...

.
ஆனால், அதே நேரம் தமிழகத்தில் 'ஜெ.' பெற்ற வெற்றி எப்படிப்பட்டது..? மம்தா போல மக்களுடன் இரண்டற கலந்து, ஆளும் கட்சியின் ஊழலை எதிர்த்து, தினமும் கஷ்டப்பட்டு போராடி… அதன் மூலம் பெற்ற வெற்றியா இது..?

மேலும் படிக்க'க.' & 'ஜெ.'... 'பதிலடி'யால் வாக்காள பொதுமக்கள் அத...
Source : http://pinnoottavaathi.blogspot.com/2011/05/blog-post_13.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails