Thursday, April 28, 2011

ஆம்பூர் பிரியாணி!

தேவையான பொருட்கள் :
 பாசுமதி அரிசி - ஒரு கிலோ              
ஆட்டுக்கறி - ஒரு கிலோ
வெங்காயம் - கால் கிலோ



இஞ்சி - 250 கிராம்
பூண்டு - 150 கிராம்
பச்சைமிளகாய் - 10 அல்லது 8
 
தக்காளி - அரை கிலோ
மல்லி இலை - ஒரு சிறிய கட்டு
 
புதினா - ஒரு சிறிய கட்டு

தயிர் -  ஒன்றரை கப்
எலுமிச்சம்பழம் - ஒன்று
நெய் - 100 கிராம்
எண்ணெய் - கால் லிட்டர்
பட்டை, ஏலக்காய், கிராம்பு - 5 கிராம்
 

பிரியாணி இலை, பிரியாணி பூ - இரண்டு
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன் 
மிளகாய்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு
தயாராக்கல் :
* பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றில் பாதியை நன்றாக பொடித்து வைத்துக் கொள்ளவும்
* ஆட்டுக்கறியைக் கழுவி தேவையான அளவில் பீஸாக்கி வைத்துக் கொள்ளவும்.
* இஞ்சியையும் பூண்டையும் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* அரிசியை நீரில் ஊற வைக்கவும்.
செய்முறை :
* பிரியாணி சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் நெய்யில் முக்கால் பாகம், எண்ணை முழுவதையும் ஊற்றி சூடானதும் மீதமிருக்கும் பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைச் சூடான எண்ணெயில் போட்டு சட்டியை மூடிவிடவும்.

* சிறிது நேர இடைவெளிவிட்டு வெங்காயம், பச்சைமிளகாய், அரைத்து வைத்துள்ள இஞ்சிபூண்டு விழுது, தக்காளி, மல்லி இலை, புதினா ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக அதில் போட்டு வதக்கவும்.
* பின்னர் தயிரை ஊற்றி மஞ்சள்தூள், மிளகாய்தூள், பொடித்து வைத்துள்ள கரம் மஸாலா அனைத்தையும் போட்டு வதக்கவும்.
* எண்ணெய் மேலே பிரிந்து வரும்போது கறியைப் போட்டு வதக்கவும். தீயை குறைத்து வைத்து மஸாலாவிலேயே கறி நன்றாக வேகும்படி செய்யவும்.
* கறி நன்றாக வெந்து வரும்போது அரிசியின் அளவில் ஒன்றுக்கு ஒன்றரை வீதம் தண்ணீர் ஊற்றி, அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து,  ஊறவைத்துள்ள அரிசியும், போட்டு தேவையான அளவு உப்பு போட்டு மூடிவிடவும்.
* கறி, அரிசி, மஸாலா எல்லாம் சேர்ந்து வரும்போது ஒருமுறை கிளறி மூடவும். மீண்டும் தீயை சிறிதாக்கிக் கொள்ளவும். இறுதியாக வைத்துள்ள கால்பாகம் நெய்யை ஊற்றி சமப்படுத்தி மூடவும்.
* பிறகு ஒரு சட்டியில் தண்ணீரை முக்கால் பாகம் நிறப்பி பிரியாணி சட்டியின்மேல் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.
சுவையான ஆம்பூர் பிரியாணி தயார்.
குறிப்பு : ஆம்பூர் பிரியாணியின் தனித்துவமே கறியை மஸாலாவில் வேகவிடுவது தான். குக்கரில் வேகவைக்க கூடாது.
- இன்றைய ரெசிப்பி ஆலோசனை வழங்கியவர் : இனியவள்
Source : http://www.inneram.com/2011042515859/amboor-biriyani

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails