Tuesday, January 11, 2011

சுகமே சுகம் !

சுகமே சுகம் !
எத்தனை வகை சுகம் .
பார்த்து  ,தொட்டு ,தடவி ,அணைத்து இப்படி பல வகை இருப்பினும் அவர் அவர் உள்ளத்தின் மனம் நாடும் வகையில் அது மாறுபடும் .

வேதனையால் வாடுபவர் சொல்பது ; வலி உள்ள இடத்தில் தடவி அதனை குறைக்க செயல் படும் போது

வாலிபன் சொல்பது ; தன் நேசமானவர்களிடம் (காதலியுடன்) தொலைபேசியில் பேசும்பொழுது ஆனால் அது நேரம் ஓட தொலைபேசி கட்டணம் உயரும் என்ற எண்ணம் வர நிறுத்த நேரும் 

சாப்பாடு பிரியர் சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது -வயறு நிரம்ப பின் அது
குறைந்துவிடும்

பெண்ணுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் குழந்தையினை   சுமப்பது சுகம்  
(ஆனால்   இந்த   தலைமுறையினர் தன் தாயினை அவள் வயதாகி விட்டாலும் மனைவி வந்த பின்பும் சிர் தன் தாயினை சுமையாக கருதுகின்றனர் )

சொல்லாமல் சுகம் காண்பது ,அதனை அனைவரும் நேசிப்பது ,முடிந்தவரை நீடிக்க விரும்புவது ,சோர்வு தந்தாலும் தொடர ஆசைப்படுவது  தாத்தா தன் பேர குழந்தைகளிடம் ஆடும் ஆட்டம் .
அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக  இருக்கும்

2 comments:

Unknown said...

very very nice and beautiful

Unknown said...

sugam yendu yeathaio ninaithirukka
unmai sugankal ethinai erukiratha.
best wishes and waiting for more

LinkWithin

Related Posts with Thumbnails