Friday, December 3, 2010

நண்பா எங்கிருந்தாலும் வாழ்க !




உண்மையான நண்பன் நம்முடன் இருக்கும்பொழுது நமக்குள் ஒரு தைரியம் உண்டாகின்றது .
நாளாகும் நட்பை வளர்க, நிமிடம் போதும் நறுக்க.
பொறுமை, பாசம்,அன்பு ,நேசம் ,விட்டுக்கொடுக்கும் மனது இருப்பின் நட்பு வளரும் .
உண்மையான நண்பன் யார் என்பதனை நமக்கு ஒரு சோதனை வரும்பொழுதான் அறிய முடிகின்றது .
மகிழ்வுக்கு உடன் வருவார் , துக்கத்திற்கு ஆறுதல் சொல்வார் ,அவசரத்திற்கு பணம் கேட்டால் ஓடி விடுவார் இவரையும் நண்பர் என்று எண்ணி இருந்து ஏமாந்து நிற்போம் .
நண்பா உன்னை நம்புகின்றேன் ,என்னுடன் வா .நீ இருக்கும்பொழுது என் மனம் மகிழ்வாகவும் அமைதியாகவும் இருகின்றது,
நண்பா எங்கிருந்தாலும் வாழ்க.





நட்பு குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
கலைஞர் உரை:
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
மு.வ உரை:
முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.




No comments:

LinkWithin

Related Posts with Thumbnails