Sunday, November 7, 2010

ஜிஹாத் பற்றிய கேள்விக்கு ஒபாமா பதில்

இஸ்லாம் எனும் மகத்தான மதத்திற்கு இந்தப் பயங்கரவாதிகள் தவறான பொருள் கொண்டு இழுக்கு ஏற்படுத்துகிறார்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

"வன்முறை ஒருபோதும் வேற்றுமைகளைத் தீர்க்காது" என்ற ஒபாமா "அப்பாவிகள் மீதான வன்முறையை இந்த பயங்கரவாதிகள் நியாயப்படுத்த முயல்கிறார்கள்" என்று குறிப்பிட்டார்.

இன்று மும்பை செயிண்ட் சேவியர் கல்லூரியில் அன்சாரி என்கிற முஸ்லிம் மாணவரின் ஜிஹாத் பற்றிய கேள்விக்கு விடையளிக்கையில் வன்முறையால் வேற்றுமைகளைக் களைய முடியாது என்பதை நாம் அடிப்படையிலேயே அறிந்துகொள்ள வேண்டும் என்று ஒபாமா குறிப்பிட்டார்.

"நான் கருதுகிறேன், ஒருசில பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்தை தவறாகப் பொருள் கொண்டு அப்பாவிகளின் மீதான வன்முறைகளை நியாயப்படுத்த நினைக்கிறார்கள். அது ஒருபோதும் சரியல்ல" என்றார் ஒபாமா.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails