Sunday, October 24, 2010

பொன் மொழிகள்

1. சிக்கனமாய் இருங்கள், விரயம் வேண்டாம். [39]
2. சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவராக இருந்த இமாம் அஸ்கரீயம் இவர்களைப் பார்த்து அழுது கொண்டிருந்தார். இதனைக் கண்ட பஹ்லுல் தனக்கும் விளையாட்டுப் பொருள் கிடைக்க வேண்டுமென இவர் அழுவதாக நினைத்து,'உமக்கும் விளையாட ஒரு பொம்மை வாங்கித் தரட்டுமா?' எனக் கேட்டார்.
இமாம் அலைஹிஸ் ஸலாம் கூறினார்: அறிவில்லாதவனே! நாம்
விளையாடவா  படைக்கப்பட்டுள்ளோம்.
'பிறகு எதற்காகப் படைக்கப் பட்டுள்ளோம் '? பஹ்ளுலு; கேட்டார்.
'அறிவுக்காகவும் இபாதத்துக்காகவும்'.
'இதை எங்கிருந்து தெரிந்து கொண்டீர்கள்'
'நாம் உங்களை வீனாகப் படைக்க வில்லை. மேலும் நம்மிடமே நீங்கள் திரும்பி வருவீர்கள்' [40] என்று இறைவன் கூறுகிறானே.
3. இழிசொல் பேசாதே உன் கண்ணியம் போய்விடும். கேலி செய்யாதே, உன்னையும பழிப்பார்கள். [41]
4. கடந்து செல்லும் ஒவ்வொருவருக்கும் ஸலாம் சொல்லும் சபையில் ஒதுங்கி அமர்வதும் பணிவைக் காட்டும். [42]
5. உள்ளம் உற்சாகமாகும் போது அதற்கு வழிவிடுங்கள் ஆனால் வெறுப்புண்டானால் விலக்கி விடுங்கள். [43]
6. துக்கத்திலுள்ளோரிடம் மகிழ்ச்சியை காட்டுவது பண்பான செயல் அன்று. [44]
7. பணிவு என்பது பொறாமை கொள்ளப்படாத அருட்கொடையாகும். [45]
8. இரகசியமாக தன் சகோதரனை உபதேசித்தவன் அவனை மதித்தான். பகிரங்கமாகப் போதித்தவன் அவனைப் பழித்தான். [46]
9. மற்றவர்களிடமிருந்து தான் வெறுப்பதை தானும் செய்யாதிருப்பது உனக்குப் போதுமான பண்காடாகும். [47]
10. அழகிய தோற்றம் வெளிப்படை அழகாம். நல்ல சிந்தனை அந்தரங்கத்தின் அழகாம். [48]
11. இறைவனை அடைதல் ஒரு நீண்ட பயணமே. இரவில் விழித்திருக்காது அந்த இலக்கை அடைய முடியாது. [49]
12. தீமைகளின் வீட்டுக்கு பொய் திறவுகோள் ஆகும். [50]
13. கொடைக்கும் மட்டுமுண்டு, மீறினால் விரயம் ஆகும். [51]
14. பொறுமைக்கும் எல்லையுண்டு மீறுவது கோழைத்தனம். [52]
Source : http://www.al-shia.org/html/tam/ahlulbayt/14_masoum/askari/04.html#link14

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails