Wednesday, October 27, 2010

ஹிஜாப்-ஏன் ? எங்கிருந்து வந்தது !

ஹிஜாப் (حجاب) என்னும் அரபிச்சொல்லுக்கு திரை(curtain), தடுப்பு(partition) என்று பொருள்படும்! இறைவேதத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே சொல்லப்பட்டுள்ளது .‘ஹிஜாப்’ என்பதனை   நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
‘ஹிஜாப்’ என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதுதான்  ‘ஹிஜாப்’.உடல் அனைத்தையும் மறைப்பது அல்ல. மறைக்க வேண்டியதனை மறைக்காமல் விடும்பொழுது பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய நிலைமை எற்பட்டு விடுகின்றது. அந்த நிலை  யாருக்கும் வரக்கூடது.பெண்கள் பர்தா அணிவதால் சமுதாயத்தில கண்ணியமானவர்களாக அறியப்படுகின்றார்கள். தீயவர்களின் தொல்லைகள், கேடுகளிலிருந்தும் தவிர்ந்துக் கொள்கிறார்கள்.  
பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்து அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செலகின்றது .

சிலர்    நினைகின்றனர் ஹிஜாப் என்னும் இஸ்லாமிய பண்பாடு முஹம்மது நபி (ஸல் ) அவர்கள் ஏற்படுத்திய முறை என்று. ஆனால் இதனை பழைய பைபிள்(Old Testament) ,புதிய பைபிள்(New Testament)இரண்டிலும் இதனைக் காணலாம் .
  The Book of Genesis, [24:64, 65] says: “Rebekah also looked up and saw Isaac. She got down from her camel and asked the servant, “Who is that man in the field coming to meet us?” “He is my master,” the servant answered. So she took her veil and covered herself.”

The fifth song of the Songs of Solomon, a woman says: “Tell me, you whom I love, where you graze your flock and where you rest your sheep at midday. Why should I be like a veiled woman beside the flocks of your friends?”  
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கும் இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளவேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்.(அல்குர்ஆன்-24:30)


தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள் தமது தந்தையர் தமது கணவர்களுடைய தந்தையர் தமது புதல்வர்கள் தமது கணவர்களின் புதல்வர்கள் தமது சகோதரர்கள் தமது சகோதரர்களின் புதல்வர்கள்இதமது சகோதரிகளின் புதல்வர்கள் பெண்கள் தங்களுக்குச் சொந்தமான அடிமைகள் ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள் பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.    
அல்குர்ஆன் (24 : 31) 
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும் உமது புதல்வியருக்கும் (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும்இ தொல்லைப்படுத்தப் படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.    அல்குர்ஆன: (33 : 59) 


வேலைக்கு செல்லும் பெண்கள் ஹிஜாப் அணிவதெப்படி 



பெண்கள் முகம் மறைப்பது அவசியமா?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails