Sunday, October 3, 2010

புதிய பூமி

கலகம் இல்லா
உலகம் காண்போம்

”ஒன்றே குலம்; ஒருவனே தேவன்”
நன்றாய் மனம் மொழி மெய்யால்
நடாத்திக் காட்டுவோம்
தாயும் ஒன்றே; தந்தையும் ஒன்றே
ஆயிரம் பிரிவுகள் ஏன் இங்கே?
படைத்தவன் ஒருவனுக்கே
பயந்து விட்டால்.....
படைப்பினம் யாவும்
வசமாகும் நம்மிடம்!!!!
சமத்துவம் என்னும்
மரத்தினை வேரறுக்கும்
”சுயநலக்” கோடாரியைத்
தொட வேண்டா.
இவையெல்லாம்
இன்றே நடந்துவிட்டால்....................
ஆதாம் ஏவாள்
ஆனந்தமாய் உலா வந்த
சுவனத்து சுகம் போல்
அமைதி பூங்காவாய்
அகிலமே மாறிவிடும்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
Kalam Kadir என்னருகில் இருப்பவர்கள் திரு.ரமேஷ்விஸ்வநாதன், யு.ஏ.இ தமிழ்ச் சங்கத் தலைவர்.
எங்கிருந்த போழ்தும் தமிழச் சங்கம்-என்றன்
அங்கங்களில் ஓர் அங்கம்
அமெரிக்காவில் இருந்தபோழ்து வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம்; சஊதியில் இருந்தபோழ்து ஜித்தா தமிழ்ச் சங்கம்; இ...ங்கு (அபுதபியில் இருக்கும் போழ்து)யு ஏ இ தமிழ்ச் சங்கம், அமீரகத் தமிழ் மன்றம், பன்னாடு இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆகியவற்றுடன் உறுப்பினராக உள்ளேன்;தமிழ் என் மூச்சு; கவிதை என் பேச்சு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails