Sunday, August 22, 2010

பள்ளிவாசல் இமாம்களுக்கு சம்பளம்: லாலு வலியுறுத்தல்


ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் 17 வருடங்களுக்கு முந்தைய உச்சநீதிமன்றம் ஆணையான அரசாங்கம் நிதிபெறும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த கூறியுள்ளன. காங்கிரஸ் சிறுபான்மையினரின் வோட்டு வங்கிக்காக மட்டுமே அவர்களிடம் கரிசனம் காட்டுகிறது. உணமையில் அவர்கள் மேல் அக்கறை இல்லை என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் நாடாளும்னரத்தின் வெளியே பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி பார்ட்டி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை ஜீரோ நேரத்தில் இமாம்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுருத்தியது. உச்சநீதிமன்ற அரசாங்கம் நிதிபெறும் பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்பதையும், நிதிபெறாத பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பதையும் 6 மாதங்களுக்குள் நடைபடுத்த வேண்டும் என்று 1993ல் தீரிப்பளித்துள்ளது என்பதை லாலு பிராசாத் யாதவ் தெரிவித்தார். "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை நடைமுறை படுத்துவோம் என அவர் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிஜேபியினருக்கு பதில் அளித்த அவர் "வேண்டுமென்றால் நீங்களும் சாதுகளுக்கும், சன்யாசிகளுக்கும் சம்பளம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகி கொள்ளாலாம்" எனறார் அவர். அரசு இதை சீக்கிரம் நடைமுறை படுத்த்வில்லை என்றால் போராட்டம் செய்வோம் என்றும் கூறினார் அவர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் சுதிப் பந்த்யோபத்யே இதற்கு தாங்களும் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய அவர் " மேற்கு வங்காளத்தில் இமாம்கள் மோசமான நிலையில் உள்ளார்கள் என்றும் மேலும் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்து உள்ளனர் என்றும் கூறினார்.
http://www.inneram.com/2010082210201/2010-08-22-06-20-00

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails