Thursday, August 12, 2010

ஒஸாமா தப்ப உதவிய சமையல்காராருக்கு சிறை

அதியமான்
வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்திடம்டம் இருந்து ஒசாமா பின்லேடன் தப்பிசெல்ல உதவிய சமையல்காரருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டை சேர்ந்த இப்ரகீம் அல் கவாஸி இவர் ஒரு சமையல்காரர். சூடானில் இருந்து சமையல்காரர்கள் சிலரை ஆப்கானிஸ்தானுக்கு பின்லேடன் அழைத்து வந்தார். தனது தீவிரவாத முகாம்களில் உள்ளவர்களுக்கு சமைக்க சமையலுக்கு அவர்களை பயன்படுத்தினார். அமெரிக்க படையினரின் தேடுதல் வேட்டையில் இப்ரகீம் சிக்கிக் கொண்டபோது.  அவன் மீது அமெரிக்காவில் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
அதன் விசாரணையில் இப்ரகீம் கூறியதாவது: ஆப்கானிஸ்தானில் சமையல் வேலை இருப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் அழைத்து சென்றனர். என்னுடன் பயணம் செய்தது ஒசாமா பின்லேடன் என அப்போது தெரியாது. அதேபோல, சமையல்காரராக வேலையை தொடங்கிய சில காலம் கழித்தே, அந்த முகாம்களில் தீவிரவாதிகள் தங்கியிருப்பதும், அவர்கள் குண்டுவெடிப்புகளை நடத்துவதும் தெரியும்.

முகாம்களில் ஒன்றில் சமையல் அறையை நிர்வகித்தேன். அல்&கய்தா ஒரு தீவிரவாத அமைப்புதான் என்று தெரிந்த பிறகும் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. ஒருமுறை அமெரிக்க படையின் தாக்குதலில் இருந்து ஒசாமா பின்லேடன் தப்ப உதவியது உண்மைதான் என்றான். இதையடுத்து, இப்ரகீமுக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை குறைக்கும்படி இப்ரகீம் அப்பீல் செய்துள்ளான். அதன் முடிவு வெளிவர ஒரு மாதம் ஆகலாம். அப்போது தண்டனை 2 ஆண்டுகளாக குறையவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails