Wednesday, August 25, 2010

ஈரான் தாக்கப்பட்டால் உலக அளவில் பதிலடி! அகமதிநிஜாத்


தங்கள் நாடு தாக்கப்பட்டால் அதற்கான பதிலடி உலக அளவில் இருக்கும் என்று ஈரான் அதிபர் அகமதிநிஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கத்தார் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அணுசக்தி பிரச்சனையில் ஈரான் தாக்கப்பட்டால், அதற்கான எங்களது பதிலடி உலக அளவில் இருக்கும் என்று கூறியுள்ளார்.
ஈரான் தாக்கப்பட்டால், அதற்காக பதிலடி கொடுக்க எங்களுக்கு இருக்கும் வழிமுறைகளுக்கு எல்லையே இல்லை. உலக அளவில் பதிலடி கொடுப்போம். நாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று தொடக்கம் முதலே கூறி வருகிறோம். எங்கள் திட்டம் எல்லாம் மின்சார உற்பத்திக்காக அணுசக்தியை பயன்படுத்துவது தான் என்று அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.inneram.com/2010082410269/if-iran-attacked-the-counter-attack-will-be-severe

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails