Sunday, April 18, 2010

பாரதியார் - ஓடி விளையாடு பாப்பா



ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ் சொல்ல லாகாது பாப்பா
தெய்வ நமக்குத் துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.
தமிழ்த் திரு நாடு தன்னைப் பெற்ற
தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தி லினியதடி பாப்பா - எங்கள்
ஆன்§ர்கள் தேசமடி பாப்பா.
சாதிக ளில்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.
---பாரதியார் 


http://seasonsnidur.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails