Wednesday, February 24, 2010

தேவையா இந்ததேர்வு

அன்புடன் மலிக்கா 

மனிதா எதை சாதிக்கமுடியவில்லை என நீ சாகத்துணிந்தாய்?
சரித்திரத்தில் இடம்பிடித்தால்தான் வாழவேண்டுமா?
உன்னை முன்னூறு நாள் உன்அன்னை மடிசுமந்தது
நீ மூர்க்கத்தனமாய் மாண்டுபோவதற்க்காகவா?

உயிரை உனக்குள் ஊட்டிவிட்டவனுக்கு மட்டுமே
அதைதிரும்ப
உனக்குள்ளிருந்து வெளியேற்றவும் உரிமைஇருக்கு

உருப்படாத உன்புத்தியால் உன்உயிரை
நீயே உருவி எடுக்க உனக்கே உரிமையில்லை

தற்கொலைதான் முடிவு என்றால்
தரணியில் மனிதவாழ்வு ஏது?

ஆகாசத்தில் பறக்கமுடியவில்லை

அந்தரத்தில் ஊஞ்சல் கட்டமுடியவில்லை

தேர்வில் தேரமுடியவில்லை

போட்டியில் வெல்லமுடியவில்லை

காதல் கைகூடவில்லை

கட்டியவனு[ளு]க்கு பிடிக்கவில்லை

காலநேரம் சரியில்லை

கடன் தொல்லை தாங்கவில்லை

”என”

இப்படி ஏதாவது ஒருஅற்ப்ப காரணங்களுக்காக
இறைவன் கொடுத்துள்ள அற்ப்புதமான
உயிரை அழித்துவிடாதே

சிலநேர தனிமை நம்மை சாதிக்கவைக்கும்
சிலநேர தனிமை நம்மைசோகத்தில் ஆழ்த்தும்
சாதிக்கும் தனிமையை தேர்ந்தெடு

உன்னைவிட்டுபோன ஒன்றுக்காக வருந்தாமல்-
இனி எதுவுமே
உன்னைதேடி வரும்படியான தைரியத்தை உருவாக்கு

பூமியில் வாழவந்ததே சோதனையில் வெற்றியடையத்தான்
துவண்டுவிடாதே தோழமையே துன்பமா? தூக்கி எறி
கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப்பார்

நெருஞ்சி முள்ளாய் குத்துகிறதா?
தென்றலாய் வருடுகிறதா?
இரண்டையும் மனதில் கொண்டு
இனிஎதற்கும் கலங்கமாட்டேன் --என்றுஏகமனதாய் முடிவெடு
இறைவனின் அருள்கொண்டு எல்லாமே வெற்றியடையும்.

அன்புடன்மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்
நன்றி :http://niroodai.blogspot.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails